துதியின் நற்கனி தூயருக்கே
இதயம் எல்லாம் கவி பாடுதே
உதடுகளால் உன்னதர்க்கே
உகந்த காணிக்கை செலுத்திடுவோம்
1. அதிகாலமே மனமே
அதினாலே பூரிக்குதே
நதிபோல் பாயுதென் உள்ளத்திலே
புதியதோர் சமாதானமே
2. மனிதர் கைவிட்ட தருணம்
தனிமையில் கலங்கிய நேரம்
கனிந்து துணை நின்று
என்னைக்கரம் பிடித்த
புனிதரை புகழ் சாற்றுவேன்
3. சத்துருவின் மிதியடிகள்
எத்தனையோ தொடர்ந்து வந்தாலும்
உத்தமன் மேல் ஏய்யும் அம்புகள் தடுத்து
யுத்தத்தில் ஜெயம் எடுத்தாரே
4. கண்கள் ஆகாரைக் கண்டதுபோல்
கண்டதே ஆ! என்னையுமே
கன்ணயராது இராப்பகலாக
கண்மணிபோல் காவல் காத்ததால்
5. தியாகாதே என்றென்னைத் தேற்றி
இயம்பற் கியலா நன்மையீந்தார்
லோகத்தின் மேன்மைகள் பேர், புகழ் யாவுமே
யாகமாய் அர்ப்பணம் செய்கிறேன்
HOME
More Songs
No comments:
Post a Comment